search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரத்தில் ரூ.2¼ கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் திறப்பு
    X

    திறப்பு விழா நடைபெற்ற போது எடுத்தபடம்.

    தாராபுரத்தில் ரூ.2¼ கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் திறப்பு

    • புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மூன்று அடுக்கு கட்டிடத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியாளர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒன்றிணைந்து செயல்பட உள்ளது.

    தாராபுரம், ஜூன்.30-

    தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வசந்தம் நகரில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் புதிய கட்டிடம் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.வேளாண்மை உதவி இயக்குநர் கே.லீலாவதி அனைவரையும் வரவேற்றார். திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் வேளாண்மை விரிவாக்க உதவி அலுவலர்கள், தோட்டகலை உதவி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மூன்று அடுக்கு கட்டிடத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியாளர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒன்றிணைந்து செயல்பட உள்ளது.

    Next Story
    ×