என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
திருப்பூர் மாவட்டத்தில் 15 மாதத்தில், 6.85 கோடி பேர் டவுன் பஸ்களில் இலவச பயணம்
- மொத்தம் 254 டவுன் பஸ்கள்இயக்கப்படுகின்றன.
- மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் 15 மாதத்தில், 6.85 கோடி பேர் இலவச பஸ்கள் மூலம் பயணித்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் கிளை 1ல் இருந்து, 43, கிளை, 2ல் இருந்து 27, பல்லடத்தில்இருந்து 51, காங்கயம், 45, தாராபுரம், 31, உடுமலை, 57 என மொத்தம் 254 டவுன் பஸ்கள்இயக்கப்படுகின்றன.
கடந்தாண்டு ஜூலை முதல், நடப்பாண்டு செப்டம்பர் வரையிலான 15 மாதத்தில் இந்த பஸ்களில், 6கோடியே, 81 லட்சத்து 59 ஆயிரத்து 815 பெண்கள், 3லட்சத்து 69 ஆயிரத்து 502 மாற்றுத்திறனாளிகள், 25 ஆயிரத்து 877 மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்கள், 38 ஆயிரத்து 186 மூன்றாம் பாலினத்தவர் எனமொத்தம், 6 கோடியே 85 லட்சத்து 93 ஆயிரத்து 380 பேர் பயணம் செய்துள்ளனர் எனமாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






