search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வெள்ளகோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஹோட்டல் தொழிலாளி சாவு
    X
    கோப்புபடம்

    வெள்ளகோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஹோட்டல் தொழிலாளி சாவு

    • நாமக்கல் பகுதியில் சேர்ந்த இளஞ்செல்வன் (35) என்பவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    நாமக்கல் பகுதியில் சேர்ந்த இளஞ்செல்வன் (35) என்பவர் வெள்ளகோவிலில், முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தார், இந்நிலையில் இன்று அதிகாலை முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் இளஞ்செல்வன் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே தகவல் அறிந்த போலீசார் இளஞ்செல்வன் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×