search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் வருகிற 15-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் வருகிற 15-ந்தேதி நடக்கிறது

    • 265 கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15ந் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
    • கிராம ஊராட்சிகளின் தணிக்கை உள்ளிட்டவைகள் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளன.

    திருப்பூர் :

    சுதந்திர தினத்தை ஒட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந்தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15ந் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

    இதில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதத்தில், சுகாதாரத்தை பேணுதல், நெகிழி உற்பத்திப் பொருள்களை தடை செய்தல், நீா் வழிப்பாதை மற்றும் நீா் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கிராம ஊராட்சிகளின் தணிக்கை உள்ளிட்டவைகள் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளன.

    இந்த கிராம சபைக் கூட்டங்களை நடத்தும் வகையில் ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.ஆகவே, பொதுமக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக நல்ல ஆலோசனைகள் குறித்து விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×