search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் மே 1-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் மே 1-ந் தேதி நடக்கிறது

    • காலை 11:00 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • கிராமசபை கூட்டத்தில் 12 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், மே தினத்தன்று, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. தொழிலாளர் தினமான வரும் மே 1ம் தேதி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராசபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 265 கிராம ஊராட்சிகளில், காலை, 11:00 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.

    கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்த விவாதம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகளின் முன்னேற்றம்.

    அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்குவது; அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு; எங்கள் கிராமம், எழில் மிகு கிராமம், ஜல் ஜீவன் என, கிராமசபை கூட்டத்தில், 12 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    கிராமசபை கூட்ட நிகழ்வுகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில், 'நம்ம கிராமசபை' என்கிற ஆன்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டு, கடந்த அக்., முதல் செயல்பாட்டில் உள்ளது. மக்களின் வருகைப்பதிவு உள்பட கிராமசபை கூட்ட நிகழ்வுகள் அனைத்தையும், இந்த செயலியில் பதிவு செய்யவேண்டும் என தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது

    Next Story
    ×