search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனரா வங்கி சார்பில் இலவச தொழில் பயிற்சி
    X

    கோப்புபடம்

    கனரா வங்கி சார்பில் இலவச தொழில் பயிற்சி

    • பயிற்சி காலை. 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.
    • பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய அரசின் ஸ்கீல் இந்தியா என்ற சான்றிதழ் வழங்கப்படும்

    திருப்பூர்:

    திருப்பூர், அனுப்பர்பாளையம் புதூரில் அமைந்துள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் ஏர்கண்டிசனர், ப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சர்வீஸ் மற்றும் பராமரித்தால் தொடர்பான பயிற்சிகள் 30 நாட்கள் வழங்கபட உள்ளது.

    பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சி காலை. 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும். பயிற்சி காலத்தில் காலை- மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயிற்சி சீருடை இலவசமாக வழங்கப்படும். தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும்.

    தொழில் பயிற்சி மட்டுமின்றி தொழிர்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும். பயற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆதார்நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 ஆகியவற்றை வங்கிக்கு கொண்டு வர வேண்டும்.

    பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய அரசின் ஸ்கீல் இந்தியா என்ற சான்றிதழ் வழங்கப்படும். திருப்பூரை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×