search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீதிமன்றத்தில் இ-பைலிங் வழக்கு தாக்கல் வருகிற 1-ந்தேதி  முதல்  அமல்
    X

    கோப்பு படம்.

    நீதிமன்றத்தில் இ-பைலிங் வழக்கு தாக்கல் வருகிற 1-ந்தேதி முதல் அமல்

    • நீதிமன்றங்களில் சில குறிப்பிட்ட வழக்குகள் மற்றும் மனுக்கள், இனிமேல் இ- பைலிங் வாயிலாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
    • எந்தெந்த வழக்குகள் மற்றும் மனுக்களை இ- பைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    நீதிமன்றங்களில் சில குறிப்பிட்ட வழக்குகள் மற்றும் மனுக்கள், இனிமேல் இ- பைலிங் வாயிலாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இப்புதிய நடைமுறை செப்டம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகள் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள், நிறைவேற்று மனுக்கள், சிவில் வழக்குகள் மற்றும் மேல்முறையீடு உள்ளிட்ட பல்வேறு மனுக்களை நேரடியாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் நடை முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இவற்றில், இ- கோர்ட்டு திட்டத்தின் கீழ், சென்னை ஐகோர்ட்டு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

    அதன்படி குறிப்பிட்ட வழக்குகள் மற்றும் மனுக்களை இ- பைலிங் வாயிலாக தாக்கல் செய்ய வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறை செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் எந்தெந்த வழக்குகள் மற்றும் மனுக்களை இ- பைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்ஜாமீன் மனுக்கள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், வாடகை கட்டுப்பாடு மற்றும் வாடகை கட்டுப்பாடு மேல்முறையீடு வழக்குகள், மறுசீராய்வு மனுக்கள், நிறைவேற்று மனுக்கள், மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளில் தனிநபர் புகார், டிரஸ்ட் ஒரிஜினல் மனுக்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனம் சார்ந்த மனுக்களை இ-பைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும்.

    இது தொடர்பான முழு விவரங்களை மாவட்ட நீதிமன்ற வெப்சைட் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×