search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீா் குழாய்களை மாற்றிக்கொள்ளலாம் - வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் அறிவிப்பு
    X

    கோப்பு படம்.

    குடிநீா் குழாய்களை மாற்றிக்கொள்ளலாம் - வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் அறிவிப்பு

    • ஏற்கெனவே இணைப்பு உள்ள வீடுகளுக்கு குழாய்கள் மாற்றியமைக்கப்படும். இதற்கு கட்டணம் இல்லை
    • புதிய இணைப்புகளுக்கு ரூ.8 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் நகராட்சியில் அம்ரூத் -2.0 திட்டத்தில் புதிதாக குடிநீா் இணைப்பும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய்களை மாற்றிக்கொள்ளலாம் என ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    வெள்ளக்கோவில் நகராட்சியில் அம்ரூத் - 2.0 திட்டத்தில் ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் 142.17 கிலோ மீட்டா் தொலைவுக்கு மெயின், பகிா்மான குழாய்கள் அமைத்து 10 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் மூலம் 16,462 குடிநீா் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஏற்கெனவே இணைப்பு உள்ள வீடுகளுக்கு குழாய்கள் மாற்றியமைக்கப்படும். இதற்கு கட்டணம் இல்லை. புதிய இணைப்புகளுக்கு ரூ.8 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். இதனை நான்கு தவணைகளில் செலுத்தும் வசதியும் உள்ளது.எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு புதிய குடிநீா் இணைப்புகள் பெறவும், ஏற்கெனவே இணைப்பு பெற்றவா்கள் குழாய்களை மாற்றியமைத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×