search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கல்லூரிகளில் ஆடை நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் - மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
    X

    கோப்பு படம்

    அரசு கல்லூரிகளில் ஆடை நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் - மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

    • முதல் நாளில், அடையாள அட்டை அணியாமல் வருவது உட்பட பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றாமல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
    • மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.

    உடுமலை:

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ளன.இந்தநிலையில் மாணவர்கள் கல்லூரிக்கான நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு பேராசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    முதல் நாளில், அடையாள அட்டை அணியாமல் வருவது உட்பட பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றாமல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    இது குறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:-

    ஒரு வாரத்துக்கு முன்பாகவே மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைமுடியை ஒழுங்கான முறையில் திருத்திக்கொண்டு வருதல், ஆடை, அடையாள அட்டை அணிவது உள்ளிட்ட சில நெறிகள் கல்லூரி செயலி வாயிலாக, முதலாமாண்டு மாணவர்கள் உட்பட அனைவருக்கும் அனுப்பப்பட்டு பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.

    அதில் நெறிகளை பின்பற்றாமல் இருந்த 50 பேரிடம் அடையாள அட்டை பெறப்பட்டு, தலைமுடிகளை திருத்தி வரவும், முறையான ஆடை அணிந்து வருவதற்கும் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×