search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோழி இறைச்சியால் வெறி பிடிக்கும் நாய்கள் -  கால்நடைகளை கடித்து கொல்வதால் விவசாயிகள் அச்சம்
    X

    கோப்புபடம்.

    கோழி இறைச்சியால் வெறி பிடிக்கும் நாய்கள் - கால்நடைகளை கடித்து கொல்வதால் விவசாயிகள் அச்சம்

    • மர்ம விலங்கு கடித்ததில் கன்று குட்டிகள் காயம் ஏற்பட்டு இறந்து கிடந்தது.
    • கால்நடை மருத்துவர் மூலமாக பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த சின்னவீரம் பட்டியைச் சேர்ந்தவர் அருளானந்தம்.விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் பெரிய கோட்டை கிராமத்தில் உள்ளது. அருளானந்தம் சாகுபடி பணிகளுடன் சேர்த்து கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு வருகிறார்.இவர் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க இரண்டு கன்று குட்டிகளை தோட்டத்து சாளையில் கட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலை வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மர்ம விலங்கு கடித்ததில் கன்று குட்டிகள் வயிறு மற்றும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டு இறந்து கிடந்தது.

    அதைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த அருளானந்தம் உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அதைத் தொடர்ந்து கன்றுக் குட்டிகளுக்கு கால்நடை மருத்துவர் மூலமாக பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.அதில் தெரு நாய்கள் கடித்ததில் கன்று குட்டிகள் இறந்தது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து வனத்துறையினர் சார்பில் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது.மேலும் ரோந்து பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதுடன் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.வனத்துறையினரின் நடவடிக்கையால் விவசாயிகள் நிம்மதி அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

    சின்னவீரம்பட்டி பகுதியில் வளர்ப்பு கோழி பண்ணைகள் உள்ளது.அதில் இறக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. ஆங்காங்கே திறந்த வெளியில் வீசி விடுகின்றனர்.இதனால் அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் இறந்த கோழிகளை உணவாக்கி வருகிறது.கோழிகள் கிடைக்காத சமயத்தில் மாமிசத்தின் மீது உள்ள மோகத்தால் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை தெருநாய்கள் துன்புறுத்தி வருகிறது. இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பண்ணைகளில் இறக்கும் கோழியை முறைப்படி குழி தோண்டி புதைப்பதும் அவசியமாக உள்ளது.அவர்களது அலட்சியமே தெரு நாய்களுக்கு ரத்தவெறி பிடித்து கால்நடைகள் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட துறையினர் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் கடமையாகும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×