search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் தி.மு.க., வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
    X

    ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றக் காட்சி.

    பல்லடத்தில் தி.மு.க., வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

    • அனைத்து தொகுதிகளிலும் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதாக நினைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
    • ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் திமுக., வடக்கு மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் சிறப்புரையாற்றினார்.

    பல்லடம்:

    பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக., வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மேற்கு ஒன்றிய திமுக., அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் திமுக., வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் குமார், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய பொருளாளர் அம்மாபாளையம் குமார் வரவேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் திமுக., வடக்கு மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் சிறப்புரையாற்றினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், திமுக., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய செய்ய வேண்டும்,கோவை பாராளுமன்ற தொகுதியில் பல்லடம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திமுக .,கூட்டணி வேட்பாளருக்கு அதிக வாக்குகள் பெற பாடுபட வேண்டும்.

    அனைத்து தொகுதிகளிலும் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதாக நினைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கு ஒன்றிய திமுக., நிர்வாகிகள் சாமிநாதன், துரை முருகன், ராஜேஸ்வரன், ரங்கசாமி, பிரகாஷ், சுரேஷ், பானுமதி, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×