

பல்லடம்
பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், பல்லடம் நகராட்சி 2 -வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ராஜசேகரன் தலைமையில் 14வது வார்டு பகுதியில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் சண்முகம், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிலம்பரசன், தாமோதரன் மற்றும் கவின்,ஆர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.