search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழங்கரை ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வினியோகம்
    X

     பழங்கரை ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் தீபாவளி பரிசு வழங்கப்பட்ட காட்சி.

    பழங்கரை ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வினியோகம்

    • பழங்கரை ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
    • வார்டு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் கோமதி தலைமையில் நடந்தது.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் கோமதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் கோமதி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், வார்டு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசுகையில் வார்டு பகுதிகளில் தெருவிளக்கு, சாக்கடை வசதி, சாலை சீரமைப்பு பணிகள் செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர். வார்டு உறுப்பினர்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுவதாக தலைவர் உறுதிகூறினார். முடிவில் ஊராட்சி செயலாளர் பரமேஸ்வரன் (பொறுப்பு) நன்றி கூறினார்.

    Next Story
    ×