

திருப்பூர் :
கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாநில தலைமை கழக செயலாளர் பெஸ்ட் சந்திரசேகர், மாநில மாணவர் அணி செயலாளர் கேபிள் தங்கராஜ். மாநகர மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுர்த்தி, மாவட்ட பொருளாளர் நாராயணசாமி,மண்டல நிர்வாகிகள் செந்தில் குமார், ராஜமாணிக்கம், குணசேகரன், ஆட்டோ நாகராஜ், மோகன், செல்வக்குமார் மற்றும் மாநகர மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.