search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசைத்தறிகள் கணக்கெடுப்பு பணியை தொடங்க விசைத்தறியாளர்கள் கோரிக்கை
    X

    கோப்புபடம்


    விசைத்தறிகள் கணக்கெடுப்பு பணியை தொடங்க விசைத்தறியாளர்கள் கோரிக்கை

    தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே அரசு அறிவித்தபடி விசைத்தறிகள் கணக்கெடுப்பு பணியை துவக்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இருப்பினும் இது குறித்த முழுமையான விவரங்கள் இல்லை, விசைத்தறிகள் வளர்ச்சி அடைந்த காலம் முதல் இன்று வரை கணக்கெடுப்புகள் நடத்தப்படவில்லை. முறையாக கணக்கெடுப்பு நடத்துவதால் விசைத்தறிகள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும். இந்தநிலையில், கடந்த 2022-ம் ஆண்டு சட்டமன்றத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் மானிய கோரிக்கை நடைபெற்றது.

    அதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கைத்தறி மற்றும் விசைத்தறிகள் ஜியொ டெக் என்னும் தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு நடத்தப்படும். எலக்ட்ரானிக் பேனல் போர்டு இல்லாத 4 லட்சம் விசைத்தறிகளில் முதல் கட்டமாக 5 ஆயிரம் விசைத்தறிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் பேனல் போர்டு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது .இந்த அறிவிப்பு வெளியாகி 11மாதங்களுக்கு மேலாகியுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியை உடனே துவங்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தமிழ்நாடு விசைத்தறி சங்கத்துடன் இணைந்து ஜவுளி துறை மூலம் மேற்கொள்ளப்படும் இந்தப்பணியானது, மின் இணைப்பு அடிப்படையில் விசைத்தறிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×