search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் தீபத்திருவிழா நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் தீபத்திருவிழா நாளை நடக்கிறது

    • புரட்டாசி மாதம் சனிக்கிழமை கிருஷ்ணரை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல சவுபாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • 6.45 மணிக்கு மகா தாமோதர தீபாராதனையும், 7 மணிக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலை வாய்க்கால்தோட்டம் பகுதியில் உள்ள காஞ்சி காமாட்சிஅம்மன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) தீபத்திருவிழா நடக்கிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமை கிருஷ்ணரை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல சவுபாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி கோவிலில் நாளை மாலை 4.30 மணிக்கு விழா தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றப்படுகிறது.

    5.15 மணிக்கு கிருஷ்ணகானம் இன்னிசை கச்சேரி நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், 6.45 மணிக்கு மகா தாமோதர தீபாராதனையும், 7 மணிக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×