search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி பேரூராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல்
    X

    கோப்புபடம்.

    அவினாசி பேரூராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல்

    • வ.உ.சி.பூங்காவில் காலை மற்றும் மாலைவேளையில் பெண்கள் உள்ளிட்ட பலர் நடைபயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
    • வ.உ.சி.பூங்காவில் சிறுவர் சிறுமியர் அங்கு விளையாடி வருகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி இஸ்மாயில் வீதியில் வ.உ.சி.பூங்கா உள்ளது. இங்கு காலை மற்றும் மாலைவேளையில் பெண்கள் உள்ளிட்ட பலர் நடைபயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். மற்றும் சிறுவர் சிறுமியர் அங்கு விளையாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று வி.எஸ்.வி.காலனி பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நவின் உள்ளிட்ட இருவர் பூங்காவிற்குள் உட்கார்ந்து மது அருந்திகொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு பணியில் இருந்த பேரூராட்சி ஊழியர் சதீஸ்குமார்(30) என்பவர் இங்கு பெண்கள் உள்ளிட்டவர்கள் நடைபயிற்சி செய்துவரும் இடத்தில் மது அருந்தக்கூடாது வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு பனியன் கம்பெனி தொழிலாளர்கள் இருவரும் சதீஸ்குமாரை நீ யார் எங்களை வெளியேற சொல்வதற்கு என்று தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து சதீஸ்குமார் அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×