search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகராட்சி மக்கள் நலப்பணிகளை முடுக்கி விட வேண்டும்  -  சிவசேனா கட்சி கோரிக்கை
    X

    கோப்புபடம்

    திருப்பூர் மாநகராட்சி மக்கள் நலப்பணிகளை முடுக்கி விட வேண்டும் - சிவசேனா கட்சி கோரிக்கை

    • மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மாநகராட்சியில் சுகாதாரப் பணிகள் மற்றும் மக்கள் நலப் பணிகளை முடுக்கி விட வேண்டும்

    திருப்பூர் :

    சிவசேனா கட்சி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் மாநில தலைவர் ரவிச்சந்திரன் உத்தரவுபடி மாநில பொதுச்செயலாளர் ராஜன்,மாநில முதன்மை செயலாளர் சுந்தர வடிவேலன், மாநில அமைப்பாளர் வேணுகோபால் ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைப்படி மாவட்ட தலைவர் கவின் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநில துணை செயலாளர் ராஜா, மூத்த பொறுப்பாளர் ரங்கசாமி, வடக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிவசேனா தலைவர்- மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடுவது என்றும், வரும் மழைக் காலத்திற்குள் திருப்பூர் மாநகராட்சியில் சுகாதாரப் பணிகள் மற்றும் மக்கள் நலப் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ்,மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம், இளைஞரணி மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரன், மாவட்ட செயலாளர் ராமராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×