search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளியில் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடக்கம்
    X

    பூமி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஊத்துக்குளியில் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடக்கம்

    • ரெயில்வே நுழைவு பாலத்தில் கழிவு நீர் கால்வாய் அமைத்தல் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.
    • ரூ.20 லட்சம் மதிப்பில் தார் சாலையாக மாற்றுதல் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

    ஊத்துக்குளி :

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ஊத்துக்குளி சென்னிமலை சாலை அரசன்காடு 2-வது வீதி மற்றும் 1வது குறுக்கு வீதி மற்றும் கடைசி வீதியில் விடுபட்ட பகுதிகளில் உள்ள மண் சாலைகளை ரூ.20 லட்சம் மதிப்பில் தார் சாலையாக மாற்றுதல்,நமக்கு நாமே திட்டத்தில் சென்னிமலை சாலை, ரெயில்வே நுழைவு பாலத்தில் ரூ.4.50 லட்சத்தில் கழிவு நீர் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுக்குட்டி, முன்னாள் ஊத்துக்குளி பேரூராட்சி துணைத்தலைவர் ராசுகுட்டி மற்றும் 7வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி குமார், பேரூராட்சி தொகுதி இளநிலை பொறியாளர், வேலை ஒப்பந்ததாரர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×