உடுமலை மலைவாழ் கிராமங்களில் கலெக்டர் ஆய்வு

மலைவாழ் மக்களின் குடியிருப்புகளைப் பாா்வையிட்டதுடன், அவா்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தாா்.உதவித் தொகை வழங்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டாா்.
மலைவாழ் கிராமங்களில் கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.  
மலைவாழ் கிராமங்களில் கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.  
Published on

உடுமலை :

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஆட்டுமலை, பொறுப்பாறு, கோடந்தூா் ஆகிய செட்டில்மென்ட் கிராமங்களில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு மேற்கொண்டாா்.அப்போது அங்கு வசித்து வரும் மலைவாழ் மக்களின் குடியிருப்புகளைப் பாா்வையிட்டதுடன், அவா்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தாா்.

இதில் ஜாதிச் சான்று, குடும்ப அட்டை, தகுதியுள்ள நபா்களுக்கு முதியோா் உதவித் தொகை வழங்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, கோடந்தூரில் நடைபெற்ற மருத்துவ முகாமையும் கலெக்டர் பாா்வையிட்டாா்.ஆய்வின்போது, உடுமலை கோட்டாட்சியா் ஜஸ்வந்த்கண்ணன், மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ராம் மற்றும் வனத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com