ராகல்பாவி பள்ளியில் தூய்மைப்பணி

பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது. பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் பற்றிய விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.
பள்ளியில் பூச்செடிகள் நடவு செய்யப்பட்டபோது எடுத்த படம்
பள்ளியில் பூச்செடிகள் நடவு செய்யப்பட்டபோது எடுத்த படம்
Published on

உடுமலை:

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் தூய்மை பாரத இயக்கம் தலைப்பில் பல்வேறு நிகழ்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம், இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பூச்செடிகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். இராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவி சுமதி செழியன் முன்னிலை வகித்தார். ராகல்பாவி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி சின்னதுரை பூச்செடிகள் மற்றும் தொட்டிகளை பள்ளிக்கு வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் பூச்செடிகளை நடவு செய்தனர்.

அப்போது பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் பற்றிய விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. இதில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் கோகுலப்பிரியா, முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் செய்திருந்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com