search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதற்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும்
    X

    ளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட காட்சி.

    பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதற்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும்

    • சாலையின் ஓரங்களில் அதிகாலை நேரத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.
    • புகை காற்று மாசு சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

    உடுமலை :

    நோய் நொடி இல்லாத நீண்ட ஆரோக்கியத்திற்கு தூய்மையான காற்றும் சுகாதாரத்துடன் கூடிய சுற்றுச்சூழலும் முக்கியமாகும். ஆனால் உடுமலை நகராட்சி பகுதியில் நிலைமை தலைகீழாக உள்ளது.

    ஆங்காங்கே அலட்சிய போக்கோடு பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காற்று மாசு, சுற்றுச்சூழல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில்:- சுகாதாரமான காற்றை பெற்று ஆரோக்கியத்துடன் திகழ சம்மந்தப்பட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சாத்தியமாகும்.ஆனால் உடுமலை பகுதியில் சாலையின் ஓரங்களில் அதிகாலை நேரத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.அதில் இருந்து வீசக்கூடிய துர்நாற்றம், புகை காற்று மாசு சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.இதனால் நடைபயிற்சி உடற்பயிற்சி செய்பவர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் அருகில் உள்ள வீடுகளில் வசித்து வருகின்ற பொதுமக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் கண்டு கொள்வதில்லை.இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும் சம்பவம் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    எனவே உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து எரிப்பதற்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும்.மேலும் உடல் மற்றும் சுற்றுப்புற சுகாதார நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை உடுமலை பகுதியில் முற்றிலுமாக தடை செய்வதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×