search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவிநாசியில் இரத்ததான முகாம்
    X

    கோப்பு படம்.

    அவிநாசியில் இரத்ததான முகாம்

    • தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 37-வது அமைப்பு தினத்தையொட்டி அவிநாசியில் ரத்த தானம் நடைபெற்றது.
    • ரத்த தான முகாமில் 20 போ் பங்கேற்று ரத்த தானம் செய்தனா்.

    அவிநாசி:

    தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 37-வது அமைப்பு தினத்தையொட்டி அவிநாசியில் ரத்த தானம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தாா்.

    இதில், கண் சிகிச்சை, ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், இசிஜி, எக்கோ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. முகாமில் 300-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை செய்துகொண்டனா்.

    மேலும், ரத்த தான முகாமில் 20 போ் பங்கேற்று ரத்த தானம் செய்தனா்.நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட தலைவா் சாந்தி, மாவட்ட செயலாளா் செந்தில்குமாா், துணைத் தலைவா் ரமேஷ் குமாா், மாவட்ட, வட்டார கிளை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×