அவினாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

மன்றபொருள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “பள்ளியில் இடைவிலகல் மாணவர்களை இல்லம் தேடி சென்று மீண்டும் பள்ளியில் சேர வலியுறுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
 ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.  
 ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.  
Published on

அவினாசி:

அவினாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மன்றபொருள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேசியதாவது:-

கார்த்திகேயன்:-எந்த வேலை வந்தாலும் அந்தந்த வார்டு உறுப்பினர்களுக்கு எப்போதும் தகவல் தெரிவிப்பதே இல்லை. அரசுத்துறை வேலைகள் எதுவும் தெரிவதில்லை. ஊருக்குள் வேலை நடப்பதை பார்த்து தான் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். இது மிகவும் வருந்தத்தக்கது. அவினாசி ராஜன் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு குடிநீர் வசதி கிடையாது. கழிவறை சுத்தம் செய்வது கிடையாது. கழிவறைக்குள் தண்ணீர் சேமிப்பு டேங்க் இல்லை. இதனால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்றார்.

சீனிவாசன்:- உப்பிலிபாளையம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காமல் இருக்கிறது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது என்றார்.

சேது மாதவன்:- பழங்கரை ஊராட்சி தேவம்பாளையத்தில் மயானத்திற்கு சுற்றுச்சூழல் அமைத்து தர வேண்டும் என்றார். கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசுகையில், "பள்ளியில் இடைவிலகல் மாணவர்களை இல்லம் தேடி சென்று மீண்டும் பள்ளியில் சேர வலியுறுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம். கடந்த கல்வியாண்டில் 256 மாணவர்கள் பள்ளி இடைவிலகலாக இருந்ததை கலவித் துறையின் முயற்சியால் 108 ஆக அது குறைந்துள்ளது. எனவேவார்டு கவுன்சிலர் ஆகிய நீங்கள் அனைவரும் இதுபோல் பள்ளி விலகலை கண்டறிந்து எங்களுக்கு தகவல் கொடுத்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com