search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அத்திக்கடவு-அவிநாசி திட்ட சோதனை ஓட்டம் குளம், குட்டைகளில் தண்ணீர் வழிந்தோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    கோப்புபடம்.

    அத்திக்கடவு-அவிநாசி திட்ட சோதனை ஓட்டம் குளம், குட்டைகளில் தண்ணீர் வழிந்தோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • துறை ரீதியாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடந்து வருகிறது.
    • சோதனை ஓட்டத்தின் போது வரப்பாளையம் பகுதியில் 5-வது நீரேற்ற நிலையத்துக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது.

    திருப்பூர் :

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் 60 ஆண்டு கடந்த கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நிறைவு பெற்று தற்போது துறை ரீதியாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடந்து வருகிறது.திறந்துவிடப்படும் தண்ணீர் பாப்பாங்குளம், குன்னத்தூர், வரையபாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குளம், குட்டைகளில் வழிந்தோடுகிறது. இதனால் விவசாயிகள், அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் மற்றும் அத்திக்கடவு ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சோதனை ஓட்டத்தின் போது வரப்பாளையம் பகுதியில் 5-வது நீரேற்ற நிலையத்துக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது.பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

    தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் செங்கோட்டையன் பார்வையிட்டார். நீர் வளத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் சோதனை ஓட்ட செயல்பாடு குறித்து விளக்கினர்.

    Next Story
    ×