search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்பு படம்.

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

    • ஆராய்ச்சிக்கான நிதியுதவியை மாநில உயர்கல்வி மன்றம் வழங்குகிறது.
    • எம்.எஸ்சி., பயோ வேதியியல், லைப் சயின்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ், பயோ வேதியியல் துறை சார்பில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு சார்ந்த ஆராய்ச்சிகளில் பங்கேற்க, ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்த ஆராய்ச்சிக்கான நிதியுதவியை மாநில உயர்கல்வி மன்றம் வழங்குகிறது. எம்.எஸ்சி., பயோ வேதியியல், லைப் சயின்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    உரிய தகுதியுடையவர்கள், டாக்டர் சாரதாதேவி, உதவி பேராசிரியர், பயோ வேதியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை- 641046 என்ற முகவரிக்கு, கல்வித்தகுதிக்கான சான்றிதழ், பிற தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும்.

    தேவையான சான்றிதழ்கள், பிற விபரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 6-ந்தேதி மாலை, 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகு கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×