search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாநல்லூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X
    பேரணி நடைபெற்ற காட்சி.

    பெருமாநல்லூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • போக்குவரத்து, காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனர்

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் போக்குவரத்து, காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெருமாநல்லூர் காவல் நிலையம் அருகே உள்ள உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, திருப்பூர் சாலை, ஈரோடு சாலை, அவிநாசி சாலை வழியாக கொண்டத்து காளியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் காவல் ஆய்வாளர் வசந்தகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் தினகரன், காவல் உதவி ஆய்வாளர்கள் அன்பரசு, உமா மகேஸ்வரி, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதில் பெருமாநல்லூர், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கேஎம்சி., பப்ளிக் பள்ளி, சக்தி விக்னேஸ்வரா, விக்னேஸ்வரா, தி இந்தியன் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனர்.

    Next Story
    ×