search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் ஆஞ்சநேயர் கோவில் சிலை வேறு இடத்துக்கு மாற்றம் -பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    X

     பல்லடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேயருக்கு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

    பல்லடத்தில் ஆஞ்சநேயர் கோவில் சிலை வேறு இடத்துக்கு மாற்றம் -பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    • பக்தர்கள் சாமி கும்பிட கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த ஆஞ்சநேயர் சிலையை காணவில்லை.
    • பக்தர்கள் முன்னிலையில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் ஜெயப்பிரகாஷ் வீதியில் 500 ஆண்டு கால பழமை வாய்ந்த காளிங்க நர்த்தன கோபாலகிருஷ்ண ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்கோவிலில், ஆஞ்சநேயர், ஆதி தீர்த்தர், உள்ளிட்ட பல்வேறு சிலை கள் உள்ளன. இந்த நிலை யில் நேற்று மாலை பக்தர்கள் சாமி கும்பிட கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த ஆஞ்சநேயர் சிலையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து இந்து அற நிலையத்துறை செயல் அலுவலர் ராமசாமியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர் கோவிலுக்குள் வந்து அங்கிருந்த அர்ச்சகரிடம் விசாரணை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்து, பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர்கள் வினோத் வெங்கடேஷ், ஜோதிமணி மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் சசிரேகா ரமேஷ்குமார், நிர்வாகிகள் ஈஸ்வரன், திலீப்குமார், கமலேஷ், தினேஷ் மற்றும் பொது மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆஞ்சநேயர் சிலை குறித்து உண்மை தெரியும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக்கூ றி உள்ளிருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப் - இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமை யிலான போலீசார் அவர்க ளுடன் பேச்சுவா ர்த்தை நடத்தினர்.

    போலீசார் விசாரணையில் இங்கிருந்த ஆஞ்சநேயர் சிலை, மாதப்பூ ர் அனுமந்தராயர் கோவிலில் கொண்டு போய் வைக்க ப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்தக் கோவி லில் இருந்து ஆஞ்சநேயர் சிலை காரில் எடுத்து வர ப்பட்டு, பக்தர்கள் முன்னி லையில் மீண்டும் பிரதி ஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஆஞ்ச நேயருக்கு மாலை அணி வித்து தீபாரா தனை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் ஆஞ்ச நேயரை வழிபட்டு சென்ற னர். இது குறித்து அறநிலை யத்துறை அதிகா ரிகள் கூறுகையில், சிலையை இடமாற்றம் செய்தது குறித்து விசா ரணை மேற்கொ ண்டுள்ளோம். விசாரணைக்கு பின் நட வடிக்கை எடுக்க ப்படும் இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர். பல்லடத்தில் ஆஞ்சநேயர் சிலை இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×