search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரம் கவிழ்ந்த சரக்கு வேன்
    X

    சாலையோரம் கவிழ்ந்து கிடந்த சரக்கு வேன்.

    சாலையோரம் கவிழ்ந்த சரக்கு வேன்

    • கோடங்கிபாளையம் அருகே சென்ற போது நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் பிரிவில் தனியாருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை செயல்படுகிறது. பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி ராசா கவுண்டம்பாளையம் என்ற இடத்தில் இரும்பு லோடை இறக்கிவிட்டு, கோடங்கிபாளையம் நோக்கி சரக்குவேன் சென்று கொண்டிருந்தது.

    வேனை பீகாரைச் சேர்ந்த ராம் பகதூர் பிஸ்வான் என்பவரது மகன் ராஜிவ் பிஸ்வான் (வயது 44), என்பவர் ஓட்டி சென்றார். வேனின் பின்புறம் பீகாரைச் சேர்ந்த ராம் கிஷான், பஸ்வான் மகன் பிரேம் பசுவான் வயது (24), மற்றும் தர்மேந்திர மோகியா (வயது 30), ஆகியோர் அமர்ந்திருந்தனர். கோடங்கிபாளையம் அருகே சென்ற போது நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் வேனில் இருந்த மூவரும் காயம் அடைந்தனர். அந்த வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×