search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் சந்தை திட்டம் - விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு
    X

    கோப்புபடம்.

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் சந்தை திட்டம் - விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு

    • திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விளைப்பொருளுக்குரிய தொகை, உடனடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படும் தேசிய வேளாண் சந்தை திட்டம் மற்றும் பொருளீட்டுக்கடன் வசதிகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வனிதா கூறியதாவது:- திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதோடு கொள்முதல் செய்யப்படும் விளைப்பொருளுக்குரிய தொகை, உடனடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    வேளாண் விளைப்பொருட்கள் விலை வீழ்ச்சியடையும் போது விளைபொருட்களை குறைந்த வாடகையில் 6 மாதம் வரை பாதுகாப்பாக இருப்பு வைத்து விலை உயரும் போது விற்பனை செய்யும் வகையில் கிடங்கு வசதியும் உள்ளது.கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு பொருளீட்டு கடன் வசதியும் உள்ளது. விவசாயிகளுக்கு பொருளீட்டு கடனாக 9 சதவீத வட்டியில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×