என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் சந்தை திட்டம் - விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு
- திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- விளைப்பொருளுக்குரிய தொகை, உடனடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படும் தேசிய வேளாண் சந்தை திட்டம் மற்றும் பொருளீட்டுக்கடன் வசதிகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வனிதா கூறியதாவது:- திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதோடு கொள்முதல் செய்யப்படும் விளைப்பொருளுக்குரிய தொகை, உடனடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
வேளாண் விளைப்பொருட்கள் விலை வீழ்ச்சியடையும் போது விளைபொருட்களை குறைந்த வாடகையில் 6 மாதம் வரை பாதுகாப்பாக இருப்பு வைத்து விலை உயரும் போது விற்பனை செய்யும் வகையில் கிடங்கு வசதியும் உள்ளது.கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு பொருளீட்டு கடன் வசதியும் உள்ளது. விவசாயிகளுக்கு பொருளீட்டு கடனாக 9 சதவீத வட்டியில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்