search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிமம் பெறாமல் காய்கறி நாற்றுக்களை விற்பனை செய்தால் நடவடிக்கை - விதை விற்பனை நிலையங்களுக்கு அதிகாரி  எச்சரிக்கை
    X
    கோப்பு படம்

    உரிமம் பெறாமல் காய்கறி நாற்றுக்களை விற்பனை செய்தால் நடவடிக்கை - விதை விற்பனை நிலையங்களுக்கு அதிகாரி எச்சரிக்கை

    • விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் விற்பனை நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள விதைகளுக்கு முறையான பதிவேடு பராமரிக்க வேண்டும்.
    • விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது

    காங்கயம்

    முத்தூர் பகுதிகளில் விதை விற்பனை நிலையங்கள் உரிமம் பெறாமல் விதைகள், காய்கறி நாற்றுக்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் விற்பனை நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள விதைகளுக்கு முறையான பதிவேடு பராமரிக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட விதைகள் பட்டியல், விற்பனை பட்டியல், முளைப்பு திறன் சான்று, பதிவு சான்றிதழ் உட்பட பல்வேறு உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். நிறுவனத்தின் முன்பு கட்டாயம் தகவல் பலகை வைத்து விவசாயிகள் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் விலை பட்டியல் விவரம் ஆகியவற்றை தெளிவாக எழுதி வைக்க வேண்டும்.

    மேலும் விவசாயிகள் விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் வாங்கும் போது தவறாமல் அதற்கான விற்பனை பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். இதில் வாங்கும் விதை குவியல் காலாவதி எண், விற்பனை செய்த நாள், வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா? என்று சரி பார்த்து வாங்க வேண்டும். இதுபோன்ற அரசு விதிமுறைகளை விதை விற்பனை நிலையங்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் ஒரு சில தானிய மண்டிகளில் திறந்த நிலையில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை விவசாயிகள் கட்டாயம் வாங்கக்கூடாது. மேலும் இப்பகுதிகளில் உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

    உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×