search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி கிருத்திகை - திருப்பூர் முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
    X

    திருப்பூர் வாலிபாளையம் முருகன் கோவிலில் தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்.  

    ஆடி கிருத்திகை - திருப்பூர் முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

    • ஆறுமுகத்தானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • முருகனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி என பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருப்பூர்:

    ஆடிமாத கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், கொங்கணகிரி கந்த பெருமான் கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், ஊத்துக்குளி கயித்தமலை கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், அவிநாசி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    ஆறுமுகத்தானுக்கு பன்னீர், தேன், திணை மாவு, பஞ்சாமிர்தம் என பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். முருகனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, பூ காவடி, மயில் காவடி என பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடனை முடித்தனர். மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றது.

    Next Story
    ×