என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நண்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி வாலிபர் கைது
- பாலமுருகனை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தினர்.
- தகராறு ஏற்பட்டு ஆத்திரம் அடைந்து கத்தியை எடுத்து பாலமுருகன் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
திருப்பூர் :
திருப்பூர் மங்கலம் ரோடு தெற்கு தோட்டம், 2வது வீதியில்வாலிபர் ஒருவர் கழுத்துஅறுக்கப்பட்ட நிலையில் ரோட்டில்கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து திருப்பூர் மத்திய பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கழுத்து அறுப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கழுத்து அறுபட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர் அப்போது அவர் கே.வி.ஆர்., நகர்,தெற்கு தோட்டம், 5வதுசேர்ந்த வீதியை சேர்ந்த பாலமுருகன்(வயது 42) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து பாலமுருகனை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் வயது (25) என்பவர்தான் பாலமுருகனை கழுத்தை அறுத்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆனந்தை தேடி வந்தனர். அப்போது மது போதையில் வெளியூர் தப்ப முயன்ற ஆனந்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது பாலமுருகனும், ஆனந்தும் நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர்.
அப்போது ஆனந்திடம் பாலமுருகன் ரூ. 500 கடன் வாங்கி உள்ளார். அந்த கடனை அவர் நீண்ட நாட்கள் ஆகியும் திருப்பிக் கொடுக்கவில்லை.
நேற்று இரவு வழக்கம் போல் இரண்டு பேரும் மது அருந்தி உள்ளனர். அப்போது ரூ.500 கடனை திருப்பி தரும்படி ஆனந்த் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலமுருகன் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து ஆனந்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஆனந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்