அமராவதி சர்க்கரை ஆலையில் அரவை தொடங்க இளஞ்சூடு ஏற்றும் விழா

ஆலை இயங்கிய நிலையில் 23 முறை பழுது ஏற்பட்டு இயக்கம் தடை பட்டுள்ளது.நடப்பு ஆண்டில் பழுதில்லாமல் முழுமையாக இயங்கும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். 
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். 
Published on

உடுமலை :

மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்ப ட்டு வருகிறது.சுமார் 63 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பழமை யான இந்த ஆலை பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இயக்கப்பட்டு வருகிறது.

உடுமலை,மடத்துக்குளம், பல்லடம்,தாராபுரம்,பழனி,நெய்க்காரப்பட்டி,ஓட்டன்சத்திரம்,குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் விவசாயிகள் இந்த ஆலை யின் அங்கத்தினர்களாக உள்ளனர். ஆனாலும் கரும்பு சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருவது,உரிய நேரத்தில் கரும்பு வெட்டாதது வெளி ச்சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு காரண ங்களால் அரவைக்கு தேவையான கரும்பு கிடைக்காத நிலையே உள்ளது.மேலும் கடந்த அரவைப் பருவத்தில் 86 நாட்கள் ஆலை இயங்கிய நிலையில் 23 முறை பழுது ஏற்பட்டு இயக்கம் தடை பட்டுள்ளது.இதனால் நடப்பு ஆண்டில் கரும்பு பதிவு செய்வதில் விவ சாயிகளிடையே தயக்கம் ஏற்பட்டுள்ளது.இதனை யடுத்து அமராவதி சர்க்கரை ஆலை பழுதில்லா மல் தொடர்ந்து இயங்கும் வகையில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையில் இயன்ற வரை சிறப்பான முறையில் பணிகள் நடைபெற்று ள்ளதால் நடப்பு ஆண்டில் பழுதில்லாமல் முழுமையாக இயங்கும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இதனையடுத்து வரும் 21ந் தேதி அரவை துவங்க திட்டமிட்டு இளஞ்சூடு ஏற்றும் விழா நேற்று நடைபெற்றது.விழாவில் அமராவதி சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முக நாதன்,கரும்பு பயிரிடுவோர் சங்கத் தலைவர் சண்முக வேல், செயலாளர் ஈஸ்வரன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பாலதண்ட பாணி,வீரப்பன்,தலைமைப் பொறியாளர் பார்த்திபன், கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன், தலைமை ரசாயன அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது அமராவதி சர்க்கரை ஆலையில் மேற்கொள்ள ப்பட்டுள்ள பணி கள்,இன்னும் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள் உள்ளிட்ட வை குறித்து விவ சாயிகள் கேட்டு தெரிந்து கொண்ட னர்.மேலும் ஆலை யில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட பாதிப்புகளைக்களை வதற்கான நட வடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது.மேலும் வரும் 17ந் தேதிக்குள் பராமரிப்புப் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்துவது எனவும்,21 -ந் தேதி அரவை தொடங்குவது எனவும் திட்டமிடப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com