search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 240 காலிப்பணியிடங்களுக்கு 6 ஆயிரம் பேர் விண்ணப்பம்
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 240 காலிப்பணியிடங்களுக்கு 6 ஆயிரம் பேர் விண்ணப்பம்

    • திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகள் உள்ளன.
    • கடைகளில் காலியாக உள்ள, 186 விற்பனையாளர்; 54 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன்கடைகளில் 240 காலி பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்காக இதுவரை ஆறாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில், 1,099 கடைகள், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கடைகளில் காலியாக உள்ள, 186 விற்பனையாளர்; 54 உதவியாளர் என, மொத்தம் 240 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் இப்பணியிடங்களுக்கு பலரும் மிகுந்த ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். கூட்டுறவு த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை பணியிடங்களுக்காக, இதுவரை, ஆறாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 14ம் தேதி கடைசிநாள் என்பதால், மேலும் ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    Next Story
    ×