search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மேலும் 6 நாட்கள் நீட்டிப்பு
    X
    திருமூர்த்தி அணை.

    திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மேலும் 6 நாட்கள் நீட்டிப்பு

    • கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் .
    • பிஏபி., கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது.

    உடுமலை:

    உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து 4 ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சுற்று தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிஏபி., கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது .இதை ஈடுகட்ட கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் .இதை ஏற்று மேலும் 6 நாட்கள் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி., பாலாறு படுகை நான்காம் மண்டல பாசன பகுதிகளில் நிலையிலுள்ள பயிர்களை காப்பாற்றவும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கூடுதலாக வரும் 24ந் தேதி வரை 6 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து உத்தரவிடப்படுகிறது. அதன்படி மொத்தம் 410 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் 94.068 ஏக்கர்நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×