search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடையை மீறி ஆா்ப்பாட்டம் - இந்து முன்னணியினர் 500 பேர் கைது
    X

    கோப்புபடம்

    தடையை மீறி ஆா்ப்பாட்டம் - இந்து முன்னணியினர் 500 பேர் கைது

    • தமிழக அரசை விமா்ச்சித்ததாக இந்து முன்னணி பொறுப்பாளா்கள் 10க்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
    • காவல் துறையினரின் தடையை மீறி இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த சில நாள்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. அப்போது அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசை விமா்ச்சித்ததாக இந்து முன்னணி பொறுப்பாளா்கள் 10க்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

    இதைக் கண்டித்து இந்து முன்னணி சாா்பில் திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்திருந்தனா். இந்த நிலையில், காவல் துறையினரின் தடையை மீறி இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

    இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், மாநில பொதுச் செயலாளா் ஜெ.எஸ்.கிஷோா்குமாா், மாநிலச் செயலாளா் சி.பி.சண்முகம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கைது செய்து தாராபுரம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா்.

    Next Story
    ×