search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி அருகே 4-வது கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு
    X

    குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் ஆறு போல ஓடுவதை படத்தில் காணலாம்.

    அவினாசி அருகே 4-வது கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு

    • ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • தாசம்பாளையம் பிரிவு அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ரோட்டில் ஆறு போல ஓடுகிறது.

    அவினாசி :

    அவினாசி அருகே அன்னூர், கருவலூர், அவினாசி, திருமுருகன் பூண்டி, அனுப்பர்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 4 வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவினாசி, மேட்டுப்பாளையம் ரோட்டில் தாசம்பாளையம் பிரிவு அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ரோட்டில் ஆறு போல ஓடுகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    குடிநீருக்காக மக்கள் அவதி பட்டு வரும் நிலையில் இப்படி குடிநீர் வீணாவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனே வடிகால் வாரியத்தனர் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×