search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4-வது குடிநீர் திட்ட வினியோக வெள்ளோட்டம் - கலெக்டர் ஆய்வு
    X

    கோப்புபடம்.

    4-வது குடிநீர் திட்ட வினியோக வெள்ளோட்டம் - கலெக்டர் ஆய்வு

    • வடக்கு பகுதிக்கு மேல்நிலைத் தொட்டிகளில் வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறது.
    • வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் சப்ளை ஆய்வு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு அம்ரூத் திட்டத்தில் 4 வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பணி ஏறத்தாழ நிறைவடைந்து தற்போது வடக்கு பகுதிக்கு மேல்நிலைத் தொட்டிகளில் வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறது.இதனை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். இரண்டாவது மண்டலம், 7வது வார்டு குருவாயூரப்பன் நகரில் ஆய்வு நடந்தது. மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    மேல்நிலை தொட்டியில் நீரேற்றும் முறை மற்றும் வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் சப்ளை ஆகியன ஆய்வு செய்யப்பட்டது. குழாய் உடைப்பு சரி செய்தல், சரியான அளவில் குழாய்கள் பதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொ ள்ள அறிவுறுத்தப்பட்டது.

    Next Story
    ×