search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாநல்லூர் அருகே வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 4 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    பெருமாநல்லூர் அருகே வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 4 பேர் கைது

    • பீகார் மாநிலத்தை சேர்ந்த பாரத்சகினி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மேற்கண்ட 4 பேரையும் பிடித்து கைது செய்தனர்.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள தாண்டாகவுண்டன்புதூர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பாரத்சகினி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியை சேர்ந்த காளிமுத்து மகன் திலோத் (வயது 22), கரூரை சேர்ந்த ரங்கன் என்பவரது மகன் சண்முகவேல் ( 23),திருச்சியை சேர்ந்த ரவி மகன் விஷ்வா ( 22), செந்தில்குமார் மகன் அறிவழகன் ( 22) ஆகிய 4 பேரும் சேர்ந்து செல்போனை பறித்து சென்றதாக தெரிகிறது.

    இது குறித்து பாரத்சகினி பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில்சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஷ்வரி, மற்றும் போலீசார் அன்பரசன், கார்த்திகேயன்,மயில்சாமி,சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மேற்கண்ட 4 பேரையும் பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×