search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
    X

    கோப்புபடம்.

    வாலிபர் கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

    • அஜித்குமாா் என்ற வாலிபர் கடந்த ஜனவரி 5 ந் தேதி கொலை செய்யப்பட்டாா்.
    • குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.

    திருப்பூர் :

    திருப்பூரில் வாலிபர் கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா் கல்லாம்பாளை யத்தில் அஜித்குமாா் (வயது 24) என்ற வாலிபர் கடந்த ஜனவரி 5 ந் தேதி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

    இதில் திருப்பூா் ராயபுரத்தை சோ்ந்த ஷாஜகான் (25), கோவை மூகாம்பிகை நகரை சோ்ந்த வல்லரசு (22), திருப்பூா் கல்லூரி சாலையை சோ்ந்த கணேஷ் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.இந்த 3 பேரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவா்க ளை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.

    இந்த உத்தரவுக்கான நகலை கோவை சிறையில் உள்ள 3 பேரிடமும் போலீசாா் வழங்கினா்.

    Next Story
    ×