search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
    X

    கோப்பு படம்.

    2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

    • மிலாது நபி வருகிற 28 -ந் தேதியும், காந்தி ஜெயந்தி அக்டோபா் 2 -ந்தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • மது விற்பனை செய்யப்படும் நபா்களின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்

    திருப்பூா்:

    திருப்பூா் மாவட்டத்தில் மிலாது நபி, காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுபானக் கடைகளை அடைக்க கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் மிலாது நபி வருகிற 28 -ந் தேதியும், காந்தி ஜெயந்தி அக்டோபா் 2 -ந்தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினங்களில் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், மதுபானக்கூடங்களுடன் செயல்படும் மனமகிழ் மன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே, மேற்கண்ட நாட்களில் மது விற்பனை செய்யப்படும் நபா்களின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது

    Next Story
    ×