search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை முயற்சி வழக்கில் கைதான 2 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
    X

    கோப்புபடம்

    கொலை முயற்சி வழக்கில் கைதான 2 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

    • குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.
    • இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகரம் மத்திய காவல் நிலையத்துக்குட்பட்ட சுபாஷ் பள்ளி சாலை பகுதியில் சிபிகாா்த்திக் என்பவரை 2 மா்ம நபா்கள் கடந்த ஜூலை 31 ந் தேதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனா்.

    இது தொடா்பாக இடுவம்பாளையத்தைச் சோ்ந்த என்.அசோக்குமாா் (19), பெரியாண்டிபாளையத்தைச் சோ்ந்த எஸ்.மோகன்குமாா் (21) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

    இந்த இருவரும் தொடா்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.

    இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள இருவரிடமும் காவல் துறையினா் வழங்கினா் .

    Next Story
    ×