என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் திருநகரில் 2-ந்தேதி மின்தடை
- திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- ஆர்.என்.புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வருகிற 2ந் தேதி (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்.நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்.கார்டன், ஆலங்காடு, வெங்கடாச்சலபுரம், காதி காலனி, கே.ஆர்.ஆர்.தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம் எலிமெண்டெரி ஸ்கூல் முதல் மற்றும் இரண்டாம் வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர்.நகர் வடக்கு மற்றும் தெற்கு பாத்திமாநகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு.வி.க.நகர், எல்.ஐ.சி.காலனி, ராயபுரம், தெற்கு தொட்டம்,
எஸ்.பி.ஐ.காலனி, குமரப்புரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜே.ஜே.நகர், திருவள்ளுவர் நகர், கொங்கணகிரி கோவில், ஆர்.என்.புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






