பொக்லைன் எந்திரம் மேலே ஏறி பெண்கள் போராட்டம்

வீடுகளை அகற்ற சென்றதால் ஆத்திரம் 2 நாட் கள் கால அவகாசம் கொடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்
பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தராபள்ளி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 1976-ம் ஆண்டு ஆதிதி ளது. ராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 48 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கி உள்ள னர். அதில் அவர்கள் வீடு கட்டி. உள்ளனர்.

பின்னர் 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 48 பேருக்கு கொடுத்த பட்டாக்களின் சர்வே எண்களிலேயே இரண்டாவது முறையாக சிலருக்கு பட்டா இடம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு கட்டப்பட்டுள்ள சில வீடுகளை இடிக்க நிர்வாகம் சார்பில் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் சென்றுள்ளனர்.

இதனால் திருப்பத்தூர் சப்- கலெக்டர், ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நல அலுவ லர் ஜெயக்குமார் மற்றும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளை முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.

மேலும் ஒரே இடத் திற்கு இரண்டு முறை பட்டா வழங்கியது உங்களுடைய தவறு. இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

கோர்ட்டு உத்தரவு வந்த பிறகு இடித்துக் கொள்ளுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். ஆனால் அதிகாரிகள் வீடு களை இடிக்க முற்பட்டதால் பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி அமர்ந்தும், எந்திரத்தின் முன்பும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பொதுமக்களுக் கும், நாட்டறம்பள்ளி போலீ சாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதன் காரணமாக அசம்பாவிதத்தை தடுக்கும் வண்ணம் மாவட்ட குற்றப்பிரிவுதுணை போலீஸ் சூப்பிரண்டு நிலவழகன் தலைமையில் 100- க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்ப ட்டனர். பொது மக்களுக்கு ஆதரவாக அதிகா ரிகளிடம், வழக்கறிஞர் கேட் டுக்கொண்டதன் காரண மாக மேலும் 2 நாட் கள் கால அவகாசம் கொடுத்து அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com