search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கம்பத்துடன் சேர்த்து கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாய்
    X

    மின்கம்பத்துடன் சேர்த்து கட்டப்பட்ட கால்வாயை படத்தில் காணலாம்.

    மின்கம்பத்துடன் சேர்த்து கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாய்

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • ரூ. 1.80 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ெதாடங்கி நடந்து வருகிறது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் ஊராட்சிக்குட்பட்ட பீர்ஜி தெருவில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 1.80 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    இந்த நிலையில் பீர்ஜி தெருவில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் அப்பகுதியில் உள்ள மின்கம்பத்துடன் சேர்த்து கட்டியுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மின்கம்பத்துடன் சேர்த்து கழிவு நீர் கால்வாயை கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×