search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
    X

    வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

    • கியாஸ் சிலிண்டர், சைக்கிளை தூக்கி சென்றனர்
    • பாத்திரங்களையும் விட்டு வைக்கவில்லை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சோலையூர் புது காலனி பகுதியை சேர்ந்தவர் டேவிட் பன்னீர்செல்வம். இவரது மனைவி ஸ்டெல்லா (வயது 42). தொழிலாளி.

    இவர் கணவனைப் பிரிந்து தனது 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். ஸ்டெல்லா கடந்த மாதம் 22- ந் தேதி பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றார்.

    பின்னர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது , பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து கம்மல் மோதிரம் உள்ளிட்ட ஒரு பவுன் நகை ரூ.30 ஆயிரம் ரொக்கம், கியாஸ் சிலிண்டர், சைக்கிள் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் திருட்டுப் போய் இருப்பது சிறிய வந்தது.

    இது குறித்து எல்லாம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×