search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுடுகாட்டில் தொழிலாளி மர்ம சாவு
    X

    கோப்பு படம்

    சுடுகாட்டில் தொழிலாளி மர்ம சாவு

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்

    ஆம்பூர் அடுத்த மாதனூர் பெரியங்குப்பத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 50). தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. ஒரு மகள், மகன் உள்ளனர். நேற்று மாலை துத்திப்பட்டு பகுதியில் உள்ள சுடுகாடு அருகே மோகன சுந்தரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனசுந்தரம் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×