தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

விளையாடிக்கொண்டிருந்த போது பரிதாபம் போலீசார் விசாரணை
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த வெங்கட்ட கவுண்டனூர் பகுதி யைச் சேர்ந்தவர் கோபி, விவ சாயி. இவரது மனைவி சுபித்ரா. இவர்களின் மூன்றா வது குழந்தை கவுஷிக் (1 1/2 வயது) கோபியும், அவரது மனைவியும் நேற்று முன்தி னம் நிலத்துக்கு விவசாய பணிக்காக சென்றனர்.

அப் போது குழந்தை கவுஷிக்கையும் உடன் அழைத்து சென்றிருந்தனர்.

அங்கு கனவின், மனைவி இருவரும் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தனர். விவசாய நிலத்தின் அரு கில் விவசாய பயன்பாட்டுக் காக தண்ணீர் தொட்டி உள்ளது. இதில் தண்ணீர் தேக்கி வைத்து நிலங்களுக்கு பாய்ச்சி வருகிறார்கள்.

அந்தப் பகுதியில் குழந்தை கவுஷிக் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளான்.

திடீரென குழந்தையை காணாததால் தேடிய போது தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக குழந்தையை மீட்டு பார்த்தபோது குழந்தை இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை தண்ணீர் தொட் டியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com