காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

துண்டு சீட்டுகள் பறிமுதல் போலீசார் விசாரணை
காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எஸ்பி கட்டுப்பாட்டு அறைக்கு ஆம்பூர் பகுதியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ஆம்பூர் அடுத்த எஸ் கே ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 48)என்பவர் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

பின்னர் ஆறுமுகத்தை போலீசார் பிடித்து அவரிடம் இருந்த துண்டு சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர் மீது போலீசா வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com